Sunday, April 3, 2011

வளம் தரும் வயிரவன்


ஈஸ்வரனின் ஆதி சொரூபங்களில் ஒன்று. வயிரவன், சட்டைனாதர், கால பைரவர், சேத்திர பாலன் அனைத்தும் மற்ற சொரூபங்கள். வயிரவனின் அருள் கிட்டினால் இல்லத்தில் அத்தனையும் நிறையும். மகிழ்வு பொங்கும் என்பது உண்மை. எனக்குத் தெரிந்து , திருப்பத்தூர் பிள்ளையார்பட்டி அருகில் வயிரவன்பட்டியில் வயிரவன் அருள் பாலிக்கிறார். பௌர்ணமி அன்றும் தேய்பிறை அஸ்டமி அன்றும் சிறப்பான பூஜைகள் நடைபெறும். சிவனை வணங்கினால் மோட்சம் மட்டுமே கிட்டும் , பொருளாதார சம்பந்தமான வேண்டுதல்கள் அவரிடம் கேட்கக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால், வயிரவன், தாயின் கருணையுடன் நம் இல்லத்தை கவனித்துக் கொள்வார். அவருக்கு விருப்பமானது கோபத்தை தவிர்த்து அனைவரிடமும் இன்முகம் காட்டுவது.
ஸ்வர்ண ஆகர்ஷன பைரவ அஷ்டகம்

தனம் தரும் வயிரவன் தளிரடி பணிந்திடில் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்தவன் பதம் மலரிட்டு வாழ்த்திடில் மகிழ்வுகள் வந்துவிடும்
சினம் தவிர்த்தன்னையின் சின்மய புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

வாழ்வினில் வளம்தர வையகம் நடந்தான் வாரியே வளங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் காணகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

முழு நிலவதனில் முறையொடு பூஜைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுற செய்திடுவான்
முழு மலர் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தை சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான் மழையெனவே வளங்களை அருள்வான் வாழ்த்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவையும் தனக்குள்ளே வைப்பான் பூரணனன் நானென்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

பொழில்களில் மணப்பான் பூஜைகள் ஏற்பான் பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணி கனகனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திட பொழிந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

சதுர்முகன் ஆண்வத்தலையினை கொய்தான் சத்தொடி சித்தானான்
புதரினில் பாம்பை தலியினில் வைத்தான் புண்ணியம் செய் என்றான்
பதரினை குவித்து செம்பினை எரித்தான் பசும்பொண் இடுவென்றான்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுக நாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களை தந்திடுவாய்
ஜெய ஜெய வைரவா ஜெகம் புகழ் தேவா செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கில்லை ஈடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்


பௌர்ணமி அன்று இரவு எட்டு மணிக்கு தீப்த்தை ஏற்றிவைத்து பதினெட்டு தடவை பாராயணம் செய்தால், தன விருத்தி கிட்டும். ஒன்பதாவது பௌர்ணமியன்று அவல் பாயாசம் செய்து நிவேதிக்கலாம். அளவற்ற கீர்த்தியையும், தனத்தையும் தரும் இந்த பூஜையை விடாமல் செய்து வளம் பெறுங்கள்.

4 comments:

  1. பைரவரின் அஷ்டகம் வைரமாய் ஜொலித்தது.பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete
  2. இது உபாசனகுலவதி ஸ்ரீ துர்க்கை சித்தர் அருளியது. நன்றி இராஜராஜேஸ்வரி

    ReplyDelete
  3. நல்லபகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  4. கருத்துரைக்கு நன்றி லட்சுமி மேடம்.

    ReplyDelete

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator