Friday, August 12, 2011

மந்திர ஜெபம் செய்யும்போது...

 உருத்திராட்சம்
உருத்திராட்சம் பயன்படுத்தி மந்திரம் சொல்லும்போது குறிப்பிட்ட விசயம் ஜெயம் பெறுவதற்காக இவற்றை பயன்படுத்தலாம்.

ஒரு முகம் - காரிய  சித்தி
இருமுகம் - லட்சுமி கடாட்சம்
மும்முகம் -சகல சித்தி
நான்கு முகம்- அறம், வீடு நல்கும்
ஐந்து - பாவத்தை போக்கும்

உருத்திராட்சத்தின் அளவு

இலந்தையளவு - சுக சௌபக்கியம்
நெல்லியளவு - துக்க நிவாரணம்
கடலை அளவு- சகல சித்தி. பலன் வரையறுக்கு முடியாது
தானமாக உருதிராடசம் வாங்கக் கூடாது. சிறிய மணி விசேசம்

உருத்திராடசத்துடன்

பொன்மணி சேர்த்தால் செல்வம்
முத்து சேர்த்தால்  புகழ்
ஸ்படிகம் சேர்த்தால் சந்தான விருத்தி
பவளம்  - வசியகாமி
வெள்ளி - வாகனகாமி

மந்திரம் சொல்ல ஏற்ற மணிகள்
சிவன் - உருத்திராட்சம்
விஷ்ணு- முத்து
ஸ்படிகம் - சூரியன்
பவளம் - சண்டிகை
தாமிரமணி- ஐய்யப்பன்

மந்திர ஜெபம் சொல்லும்போது கணக்கிட,
விரல்ரேகை - எட்டு பங்கு அதிகம்
பவளம் - ஆயிரம் மடங்கு
ஸ்படிகமணி- பத்தாயிரம் மடங்கு
முத்துமணி -இலட்சம் மடங்கு
தாமிரமணி - 10 லட்சம் மடங்கு
பொன்மணி - கோடி மடங்கு
உருத்திராட்சம் , தர்ப்பை முடி - கணக்கிட முடியாத பலன் தரும்.
கையில் வைத்திருக்கும் மந்திர மாலையின் மணிகளுக்கு எவ்வளவு விசேசம் என்று தெரிந்தது அல்லவா. இனி இவற்றை கையில் வைத்து மந்திரம் சொல்லும்போது தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதும் தவறான விளைவை தரும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஜெப மாலையில் மணிகளின் எண்ணிக்கை
30 மணி - ஐஸ்வர்யம்
27 மணி- சக்தி
25 மணி - முக்தி
15 மணி - மந்திர சித்தி

கிழக்கு பார்த்து சொன்னால் வசியம்
மேற்கு பார்த்து சொன்னால் - தனம்

மணியை உருட்ட
பெருவிரல் - முக்தி
சுட்டு விரல் - சத்துரு நாசம்
மத்திம விரல் - பொருள்
மோதிர விரல் - சாந்தி
கனிஷ்ட விரல் - யாவும் உண்டாகும்.

நம்மை பார்த்து உள் பக்கமாக மணியை உருட்டினால் நமக்கான மந்தர பலிதம்.
மற்றவர்கெனில் வெளிபக்கமாக உருட்டவேண்டும்.

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator