Friday, August 12, 2011

மந்திர ஜெபம் செய்யும்போது...

 உருத்திராட்சம்
உருத்திராட்சம் பயன்படுத்தி மந்திரம் சொல்லும்போது குறிப்பிட்ட விசயம் ஜெயம் பெறுவதற்காக இவற்றை பயன்படுத்தலாம்.

ஒரு முகம் - காரிய  சித்தி
இருமுகம் - லட்சுமி கடாட்சம்
மும்முகம் -சகல சித்தி
நான்கு முகம்- அறம், வீடு நல்கும்
ஐந்து - பாவத்தை போக்கும்

உருத்திராட்சத்தின் அளவு

இலந்தையளவு - சுக சௌபக்கியம்
நெல்லியளவு - துக்க நிவாரணம்
கடலை அளவு- சகல சித்தி. பலன் வரையறுக்கு முடியாது
தானமாக உருதிராடசம் வாங்கக் கூடாது. சிறிய மணி விசேசம்

உருத்திராடசத்துடன்

பொன்மணி சேர்த்தால் செல்வம்
முத்து சேர்த்தால்  புகழ்
ஸ்படிகம் சேர்த்தால் சந்தான விருத்தி
பவளம்  - வசியகாமி
வெள்ளி - வாகனகாமி

மந்திரம் சொல்ல ஏற்ற மணிகள்
சிவன் - உருத்திராட்சம்
விஷ்ணு- முத்து
ஸ்படிகம் - சூரியன்
பவளம் - சண்டிகை
தாமிரமணி- ஐய்யப்பன்

மந்திர ஜெபம் சொல்லும்போது கணக்கிட,
விரல்ரேகை - எட்டு பங்கு அதிகம்
பவளம் - ஆயிரம் மடங்கு
ஸ்படிகமணி- பத்தாயிரம் மடங்கு
முத்துமணி -இலட்சம் மடங்கு
தாமிரமணி - 10 லட்சம் மடங்கு
பொன்மணி - கோடி மடங்கு
உருத்திராட்சம் , தர்ப்பை முடி - கணக்கிட முடியாத பலன் தரும்.
கையில் வைத்திருக்கும் மந்திர மாலையின் மணிகளுக்கு எவ்வளவு விசேசம் என்று தெரிந்தது அல்லவா. இனி இவற்றை கையில் வைத்து மந்திரம் சொல்லும்போது தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்துவதும் தவறான விளைவை தரும் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

ஜெப மாலையில் மணிகளின் எண்ணிக்கை
30 மணி - ஐஸ்வர்யம்
27 மணி- சக்தி
25 மணி - முக்தி
15 மணி - மந்திர சித்தி

கிழக்கு பார்த்து சொன்னால் வசியம்
மேற்கு பார்த்து சொன்னால் - தனம்

மணியை உருட்ட
பெருவிரல் - முக்தி
சுட்டு விரல் - சத்துரு நாசம்
மத்திம விரல் - பொருள்
மோதிர விரல் - சாந்தி
கனிஷ்ட விரல் - யாவும் உண்டாகும்.

நம்மை பார்த்து உள் பக்கமாக மணியை உருட்டினால் நமக்கான மந்தர பலிதம்.
மற்றவர்கெனில் வெளிபக்கமாக உருட்டவேண்டும்.

Wednesday, July 20, 2011

அம்மன் அருள் தரும் ஆடி மாதம்.




      ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதம். ஆடியில் ஐந்து  வெள்ளி கிழமைகள் வருவதுதான் சிறப்பு.  ஆடி வெள்ளியில்  அம்மனுக்கு கூழ் செய்து வணங்கினால் அன்னையின் மனம் குளிர்ந்து அருள் தருவாள். ஆடியில் அம்மனுக்கு மஞ்சள் காப்பு செய்வது பழக்கம். வீட்டில் சுமங்கலி பூஜை செய்வதும் சிறப்பு. வர லட்சுமி விரதம் இந்த மாதம்தான் வருகிறது. ஆடி மாதத்தில் குல தெய்வத்திற்கு மாவிளக்கு போடுவதும் விசேச பலன்களை தரும்.

அம்மனுக்கு கூழ் செய்வது எப்படி?
   ராகி தானியம் வாங்கி வெயிலில் காய வைத்து மிஷினில் கொடுத்து அரைத்து பயன்படுத்தலாம் அல்லது சுத்தமான ராகி மாவு  பாக்கெட்டாக கடைகளில் கிடைக்கிறது அதனையும் பயன்படுத்தலாம்.  ஒரு பங்கு மாவிற்கு மூன்று பங்கு நீர் விட்டு கரைத்துக் கொள்ளவும்.  இதனை அடுப்பில் வைத்து கிண்டவும். மாவின் நிறம் மாறி இறுகி வரும். தண்ணீரில் கை வைத்து மாவில் தொட்டால் ஒட்டக் கூடாது. இறக்கி வைத்து விடவும். ஆறிய பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், மோர் சேர்த்து கரைக்கவும். கூழ் தயாரானதும் அம்மனுக்கு படைக்கும் முன் வேப்பிலை சேர்த்து படைக்கவும். உப்பு சேர்ப்பது இல்லை. பக்தர்களுக்கு தரும் போது வேண்டுமானால் உப்பு சேர்த்து தரலாம்.

குல தெய்வத்திற்கு மாவிளக்கு
     பச்சரிசியை ஈரமாவு திரிக்கும் மெஷினில் தந்து அரைத்துக் கொள்ளவும். கால் கிலோ அரிசி எனில் கால் கிலோ நாட்டுச்சர்க்கரை எடுத்துக் கொள்ளவும். ஒரு அகண்ட பாத்திரத்தில் மாவையும் சர்க்கரையையும் கொட்டி ஏலக்காய், பச்சை கற்பூரம் சிறிதளவு பொடி செய்து சேர்த்துக் கொள்ளவும். லேசாக தண்ணீர் தெளித்து இறுக்கமாக பிசைந்து குவித்து பிடித்து வைக்கவும். நடுவில் குழி செய்து திரி போட்டு, நெய் ஊற்றி விளக்கை தயார் செய்யவும். விளக்கில் குங்குமப்பொட்டு வைத்து , பூ  வைத்து சாமி முன் குல தெய்வத்தை நினைத்து விளக்கேற்றவும். இதனை ஆடி வெள்ளியில் வீட்டிலேயே செய்யலாம். குலதெயவம் குலம் காக்கும்.
திருவிளக்கு பூஜை
ஆடி வெள்ளியில் சுமங்கலிகள் திருவிளக்கு பூஜை செய்வதும் குடும்பத்திற்கு நல்லது. இதனையும் வீட்டிலேயே செய்லாம். குத்துவிளக்கு குறைந்த பட்சம் இரண்டு முகமாவது தீபமேற்றி , குங்கும அர்ச்சனை செய்து தேவியின் அருளைப்பெறலாம்.

Thiratti.com

Thiratti.com Tamil Blog Aggregator